கர்மா! (குஷ்வந்த் சிங் சிறுகதை)

 

 கர்மா!   குஷ்வந்த் சிங்

         தமிழில்:  நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

 

  சர் மோகன்லால் முதல்வகுப்பு வெயிட்டிங் ரூமிலிருந்து ஜன்னல்வழியாக ரயில்வே ஸ்டேஷனைப் பார்த்தார். அந்தக் கண்ணாடி அப்படியே இந்தியாவை காட்சிப்படுத்தியது. சிவப்புச்சூரியன் மெதுவாக மறைந்துகொண்டிருந்தான். அந்தஒளி தரைகளில் பட்டு மஞ்சளாக சிதறிக்கொண்டிருந்தது.சூரியனின் அந்த சிறு வெளிச்சம் கண்ணாடிவழியாக உள்புகுந்தது. மோகன் சிரித்துக்கொண்டார் இந்தியாவின் ஏழ்மையைப் பார்த்து. கண்ணாடியும் மோகனைப்பார்த்து சிரித்ததுபோலிருந்தது.

 அவரே கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொண்டார். “நீ எல்லாம் சரியாகத்தான் இருக்கிறாய் கிழவா!” என்றுமுணுமுணுத்த உதடுகளோடு அவர் தம்மை ஒருமுறைப்பார்த்துக்கொண்டார். அவர் இன்னமும் மிடுக்காகத்தான் இருந்தார். நன்கு டிரிம் செய்யப்பட்ட மீசை. “சாவில்லிரோசூட் அணிந்து பட்டனில்கார்னேஷன்பூ அணிந்திருந்தார். அவர்மீது ஒரு வித நறுமணம் வீசியது. அதுகலோன்பர்ஃப்யூம் மற்றும் டால்கம் பவுடர் அவர் பயன்படுத்திய வாசனைசோப் எல்லாம் கலந்து ஒருவிதமான மணம் வீசியது. திரும்பவும் அவர் உதடு பேசியதுஓல்ட் ஃபெலோ உனக்கென்ன குறை?”

   இப்படித்தான் அவர் பலமுறை தனக்குத்தானே பேசிக்கொள்வார். பிறகு அவர் கண்ணாடியைவிட்டு விலகிகுட்பைகூறினார் அவரது உள்மனதிற்கு. பின்னர் தன்வாட்ச்சை பார்த்துவிட்டுகோய் ஹை! (யாரது) என்று குரல் கொடுத்தார்.

 ஒரு பேரர் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்.

 ஏக் சோடாஎன்று ஆர்டர் செய்துவிட்டு வந்ததும் விஸ்கியுடன் கலந்து சேரில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தார்.

 அந்த வெயிட்டிங் ரூமிற்கு வெளியே மோகன் லாலின்லக்கேஜ்சுவரோரமாய் இருந்தது. ஒரு சிறியகிரேகலர் ட்ரங்க்பெட்டி மீது லட்சுமி(மோகன்லாலின் மனைவி) அமர்ந்துகொண்டு நியூஸ்பேப்பர் கொண்டு விசிறிக்கொண்டு இருந்தாள். அவள் மிகவும் குள்ளமாக குண்டாக நாற்பதைத் தொடும் வயதிலிருந்தாள். ஓர் அழுக்கேறிய  சிவப்பு பார்டர் போட்ட வெள்ளைச்சேலை உடுத்தியிருந்தாள். அவள் மூக்கில் பெரிய எட்டுக்கல் மூக்குத்தியும்  கைகளில் வைர வளையல்களும் அணிந்திருந்தாள். மோகன்லால் பேர்ரிடம் பேசுவதையும் பின் அவர் விஸ்கி அருந்துவதையும் பார்த்துக்கொண்டிருந்தாள். 

  ரயில்வே கூலி ஆள் ஒருவன் அவளைக் கடக்கும் சமயம் அவனிடம் பெண்களுக்கான கம்பார்ட்மெண்ட் எங்கு நிற்கும் என்று கேட்டாள். அதற்கு அவன் பிளாட்பார்மின் வலது கோடி முனை என்று சொல்லியபடி கடந்தான்.

 அவனை நிறுத்திய லட்சுமி பெட்டியைத் தூக்கிவரும்படி சொன்னாள். அவன் தலைப்பாகை அணிந்து அந்த ட்ரங்க்பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடக்க லட்சுமி தன் வெண்கல டிபன் பாக்ஸை கையில் எடுத்துக்கொண்டு அவனைத் தொடர்ந்தாள்.

பிளாட்பார்மின் வலது கோடி முனைக்குவந்த அவள் கூலியின் தலையிலிருந்த ட்ரங்க்பெட்டியை இறக்க உதவிவிட்டு அவனுடன் உரையாட ஆரம்பித்தாள்.

  இங்கு எல்லா ரயில்களிலும் கூட்டமாக இருக்குமா?”

  பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும்! ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்!”ஜனினாவில் கூட்டம் இருக்காது.என்றான் அவன்.

  பெட்டிமீது அமர்ந்து கொண்ட லட்சுமி,“சரி! அப்படியானால் நான் சாப்பாட்டை முடித்துக்கொள்ளட்டுமா?” என்று வெண்கல டிபன் கேரியரைத் திறந்து  உள்ளிருந்த சப்பாத்தியை எடுத்து மாங்காய் ஊறுகாயுடன் வைத்து உண்ணத்தொடங்கினாள்.

 கூலியாள் வேறுபுறமாக அமர்ந்துகொண்டு மணலில் விரல்களால் கோலமிட்டபடிநீங்கள் தனியாகவா பயணிக்கிறீர்கள் அக்கா?” என்று விசாரித்தான்.

  இல்லை தம்பி! என்னுடன் என் கணவரும் வருகிறார். அவர் வெயிட்டிங் ரூமில் உள்ளார். அவர் முதல்வகுப்பில்தான் வருவார். உயர்பதவி வகிக்கும் அவர் பாரீஸ்டர். அத்துடன் அவர் நிறைய ஆபீஸர்களை சந்திக்க வேண்டியிருக்கும். நிறைய ஆங்கிலேயர்கள் முதல்வகுப்பில் பயணிப்பார்கள் ஆனால் நானோ சாதாரண கிராமத்துப்பெண். எனக்கு ஆங்கிலம் தெரியாது. பேசுவதும் புரியாது. என்னை உடன் அழைத்துச்செல்ல என் கணவருக்குச் சங்கடமாயிருக்கும்.அதனால் நான்ஜனினாவில் பயணிக்கிறேன்.

 லட்சுமி வெளிப்படையாகப் பேசினாள். அவள் பேச்சில் கபடில்லை.அதேசமயம் அவள் கணவனை விட்டுக்கொடுப்பதாய் இல்லை. அவளது கணவன் அவளுடன் ஒரு பொழுதையும் கழிக்க விரும்பவில்லை. அவள் கணவனுடன் வாழ்ந்தாளும் தனியாக க்ரவுண்ட் ஃப்ளோரில்தான் வசிக்கிறாள். அவளது கணவன் அவளது வறுமையான உறவினர்களை வருத்தப்படும்படி பேசி தன்னுடைய பங்களாவுக்கு வர வேண்டாமென்று விரட்டி விட்டான். அதனால் அவர்கள் வருவதுமில்லை. இதில் எதையும் கூலியாளிடம் சொல்லவில்லை லட்சுமி.

  ரயில் வருவதற்கு அறிகுறியாக சிக்னல் விழுந்துபெல்லும் அடிக்கப்பட்டது. லட்சுமி உணவை முடித்துக்கொண்டு கைகளில் ஒட்டிக்கொண்டிருந்த ஊறுகாயை கல்லில் தேய்த்து அகற்றி பொதுக்குழாயில் கைகளைக் கழுவினாள். வாயை நன்கு கொப்பளித்து சுத்தப்படுத்தினாள். பிறகு சேலையில் கைகளையும் வாயையும் துடைத்துக்கொண்டுட்ரங்க் பெட்டிநோக்கி நடந்தாள். இன்றைய உணவைக் கொடுத்தமைக்கு கடவுளுக்கு நன்றி கூறினாள்.

 ரயில் வந்து நின்றது. ரயிலின் கார்டுவேனின் முன் பெட்டியானஜனினாவின் கதவுகளைத் திறந்துகொண்டு பெட்டியினுள் லட்சுமி ஏறினாள். பிறகு ஜன்னலோரம் அமர்ந்துகொண்டாள். ட்ரங்க் பெட்டியைக்கொண்டு வந்து வைத்த கூலியாளிடம் இரண்டு அணாவைக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தாள்.

  பிறகு அவள் தன்னுடைய வெற்றிலைப்பெட்டியை திறந்து, பாக்கை எடுத்து பாக்குவெட்டியால் பாக்குகளை துண்டாக்கி வெற்றிலைகளை காம்பு நீவி நரம்புகளை கிழித்துவிட்டு சுண்ணாம்பு தடவி பாக்குடன் சேர்த்து மடித்து வாயில் அடக்கிக் கொண்டாள். பிறகு வசதியாக அமர்ந்துகொண்டு ப்ளாட்பார்மின் ஜன நெரிசலை ரசிக்க ஆரம்பித்தாள்.

  ரயில் வந்தது. மோகன்லாலை சிறிதும் பாதிக்கவில்லை. மெதுவாக அவர் ஸ்காட்ச்சை சிப்பியபடி  பேரரிடம் லக்கேஜை முதல்வகுப்பு பெட்டியில் வைக்கும்படி கூறினார்.

 அவர் ஐந்துவருடம் மேலைநாட்டில் இருந்தமையால் அவர் மேலைநாட்டினரைப்போலவே நடந்துகொண்டார். ஐந்துவருடங்கள் இங்கிலாந்தில் இருந்தமையால் இந்த மேலைநாட்டுப்பழக்கவழக்கங்கள் அவருக்கு அத்துப்படியாகி இருந்தது. கீழ்தட்டு மக்களை அவர் மதிப்பதே கிடையாது.எப்போதாவதுதான் அவர் தமிழ் பேசுவார். அவர் ஒரு ஆங்கிலேயனாக வாழவே விரும்பினார். “ஆக்ஸ்போர்ட்யூனிவர்சிட்டியில் படித்த காரணத்தினால் தூய ஆங்கிலம் அவருக்கு நுனிநாக்கில் வரும்.தூய ஆங்கிலம் பேசுபவர்களையே அவர் விரும்பினார். அவர் பேச விரும்புவதும் பேச்சும் ஆங்கிலேயர்களுடன் தான். அவரது பேச்சும் ஆங்கிலப்புத்தகங்கள் பற்றியும் அரசியல பற்றியும்தான் இருக்கும்.

  அவர் ஒரு பரிபூரண ஆங்கிலேயனாக மாற விரும்பினார். அவர் ஆங்கிலேயர்களுடன் ரயில் பயணம் செய்ய விரும்பினார். அவர்களை தன்பக்கம் கவர்ந்திழுத்து பேச ஆரம்பிப்பார். அதே சமயம் ஆங்கிலம் பேசும் இந்தியர்களிடம் கூட அவர் பேச விரும்பமாட்டார்.

 ஜன்னலோரமாக அமர்ந்துதி டைம்ஸ்நாளிதழை பிரித்து வைத்துக் கொண்டு அது ஆங்கிலேயர் கண்களில் படுமாறு அதில் உள்ள குறுக்கெழுத்தை பூர்த்தி செய்ய ஆரம்பிப்பார். முடித்துவிட்டு வில் ஃபினிஷ் இட்என்று சத்தமாகச் சொல்வார். அதைப்பார்த்து ஆங்கிலேயர்கள் அவருடன் பேசுவார்கள். பேச்சு ஆக்ஸ்போர்டுகாலேஜ், மாஸ்டர்கள், ட்யுட்டர்கள், படகுப்போட்டிகள் என்று ஆரம்பிக்கும்.

சில சமயம் இந்த யுக்தி பலிக்காத போது மோகன் பேரரை அழைத்துஸ்காட்ச்எடுத்துவரச்சொல்வார். இது ஆங்கிலேயரை அவர் வழிக்கு கட்டாயம் கொண்டுவரும். பிறகு அவர் சட்டைப்பையிலிருந்துகோல்ட்சிகரெட் எடுப்பார். ஆங்கிலேயர் வியந்துஇந்த சிகரெட் எப்படி இந்தியாவில்?” என்று வினவுவர். தான் இங்கிலாந்தில் படித்த பேச்சை அவர்களிடம் ஆரம்பிப்பார் மோகன்லால். ஐந்துவருடம் இனிமையாக இங்கிலாந்தில் கழித்தேன். ஆனால் 45ம் வருடத்தில் இந்த அழுக்குப் படிந்த இந்தியாவில் காட்டு மிராண்டிகளுடன் வாழவேண்டியுள்ளது என அவர் மனதில் நினைத்துக்கொண்டிருந்தார்.

 சர் மோகன்லாலின் நினைவுகளை பேரர் கலைத்தான். லக்கேஜை முதல்வகுப்பில் வைத்தாயிற்று. முதல்வகுப்பு , கூபே எஞ்ஜினுக்கு அடுத்த பெட்டி என்றான்.

மோகன்லால் எழுந்து மிடுக்காக நடந்து முதல்வகுப்பை நோக்கிச்சென்றார், அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. முதல்வகுப்பு காலியாக இருந்தது.பெட்டியில் ஏறி ஜன்னலோரமாக அமர்ந்தார். டைம்ஸ் பத்திரிகையை எடுத்து விரித்துக்கொண்டார்.

மோகன்லால் சத்தம் கேட்டு ஜன்னல்வழியாகப் பார்த்தபோது இரண்டு ஆங்கிலேய சிப்பாய்கள் வேகமாக நடந்து ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாய் பார்த்தபடி வந்தனர், அவர்கள் முதுகில் கேன்வாஸ் பேகை சுமந்தபடி மோகன்லாலின் கம்பார்ட்மெண்டை கடந்தனர். மோகன் அவர்களை வரவேற்க நினைத்தார். சிப்பாய்களுக்கு இரண்டாம் வகுப்பில் பயணிக்கவே உரிமை. அவர்கள் தன்னுடன் பயணித்தால் நன்றாக இருக்கும் என்று மோகன்லால் நினைத்தார். அதற்காக கார்டுடன் பேசவும் அவர் தயாராக இருந்தார்.

   அந்த சிப்பாய்கள் மோகன்லாலின் கம்பார்ட்மெண்ட் வந்தடைந்தனர். அவர்கள் மகிழ்வுடன் கூபேவைப் பார்த்தனர்.

 ஒருவன் வந்து நின்று, “பில் முன்னே பார்!” என்றான்.

அவனுடைய சகா வந்து மோகனைப் பார்த்தான்.

நீக்ரோவே வெளியே வா! என்றான் இறுகிய முகத்துடன்.

மோகன் கதவைத்திறந்து, சிறு முறுவலுடன் அவர்களை நோக்கினார்.  இது ரிசர்வ் செய்யப்பட்டது என்றார்.   

இதை அவர்கள் சிறிதும் ரசிக்கவில்லை.

  .அதுஜனங்களுக்கு  ஆர்மி ஆபீஸர்களுக்குஅல்ல! ‘ஆர்மிஆபிஸர்களுக்கு என்று தன் சட்டையைத் தொட்டுக் காட்டினான் பில். அடுத்து அவன் வாயிலிருந்து கோபமாக வார்த்தைகள் வந்து விழுந்தன.

 ஏக் தம் ஜாவோகெட் அவுட்!”

ஸே! ஸே! ஸுயர்லி..!” சர்மோகன் ஆக்ஸ்போர்ட் ஆங்கிலத்தில் பேச முயல அதை அவர்கள் சிறிதும் சட்டை செய்யவில்லை. மோகன் சிறிது சத்தமாகக் கூறினார். ” யம் பாரீஸ்டர்!” ஆனால் அவர்கள் காதில் அதுவிழவில்லை. ரயில் கிளம்ப விசில் ஊதப்பட்டது. பச்சைக்கொடி காட்டப்பட்டது.

  அவர்கள் மோகனின் சூட்கேஸை தூக்கி ப்ளாட்பார்மில் வீசினர். அதே கதிதான் அவருடைய ப்ளாஸ்க் மற்றும் பெட் டைம்ஸ் நாளிதழுக்கும். மோகனுக்கு ஆத்திரம் பொங்கியது.

 பாஸ்டர்ட்ஸ்! பாஸ்டர்ட்ஸ்!” கோபமாக கத்தினார்.” வில் ஹேவ் யூ அரெஸ்டட்” “கார்ட்ஸ்! கார்ட்ஸ்!”  உரக்கக் கூச்சலிட்டார்.

பில்லும் ஜிம்மும் திரும்பினர். அவர்கள் மோகனின் இந்த வார்த்தைகளை விரும்பவில்லை.

  முட்டாளே! உன் வாயை மூடு!” என்ற ஜிம் மோகனின் கன்னத்தில் அறைந்தான்.

 ரயில் கிளம்ப இரண்டாவது விசிலும் ஊதப்பட ரயில் கிளம்பியது அவர்கள் மோகனைப் பிடித்து வெளியே தள்ள மோகன் ப்ளாட்பார்மில் அவரது சூட்கேஸ் படுக்கை விரிப்புகளின் மீதுஹோவென கத்தியபடி  விழுந்தார்.

சர் மோகன் மிகவும் தடுமாறிப் போய் எழுந்து நின்று மீண்டும்இந்த அழுக்குப்படிந்த  மண்ணில் விழுந்தார். அவர் ட்ரெயின் மெல்ல தன்னைக் கடப்பதைக் கண்டார். ரெயிலின் கடைசிப்பெட்டியின் முனையில் சிகப்பு விளக்கு எரிவதையும் கார்டு கையில் கொடி அசைந்து கொண்டிருப்பதையும் கண்டார்.

 அதே சமயம்ஜனினாபெட்டியில் லட்சுமி வசதியாக அமர்ந்திருந்தாள். அவளது எட்டுக்கல் பேசரி மூக்குத்தி விளக்கொளி பட்டு மின்னியது. அவளது வாய் வெற்றிலை அடக்கியதால் உப்பியிருந்தது. ட்ரெயின் வேகமெடுக்க தன் வாயிலிருந்த வெற்றிலைச்சாற்றை அவள் வெளியே துப்ப சிவப்பான அந்த எச்சில் வெளியே விழுந்துகிடந்தஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பாரீஸ்டர்  மோகன்லாலின் முகத்தில் பட்டுத் தெறித்தது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்!

 

Comments

  1. குஷ்வந்த் சிங் அவர்களின் கதை மொழியாக்கம் படித்தேன். அவரது சில கதைகள் படித்திருக்கிறேன். இந்தக் கதை படித்த நினைவில்லை. பதிவு சிறப்பு. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  2. அழகான மொழி பெயர்ப்பு. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  3. அன்புள்ள தளிர் அண்ணா வனக்கம். தேவகோட்டை தொப்பி பதிவர் நடத்திய பதிவர் பயிற்சி பட்டறை மூலமே உங்கள் பதிவு பற்றி தெரியும், என் கவிதைகளை பார்த்த அண்ணன் ஹைகூ கவிதைகளின் பிதாமகன் தளிர் அண்ணாவிடம் கவிதை அனுப்பி செப்பனிட்டு அதிலிருந்து படி என்றார். நானும் என் கவிதை சிந்தனைகளை பகிர்ந்தேன் ஆனால் இன்று வரை பதில் இல்லை. எனக்கு வரும் எழுத்துபிழைகள் தான் காரனம் என்று சொன்ன அண்ணன் வேறு ஒரு நண்பரிடம் காண்பித்து பிழை திருத்தி பதிவிட சொன்னார். அது படி தான் இந்த பதிவுபதில். இந்த ஹைகூ வை பார்த்து உங்களை போலவே நான் எழுதியதாக அண்ணன் சொன்னார்.
    தலைப்பு: குயில்-
    சுடாத வெயிலும் இல்லை
    பாடாத இதுவும் இல்லை.
    கவிதை by சித்திரராமன்

    ReplyDelete
  4. அண்னா, வணக்கம். ஏன் அண்னா பதில் தரவில்லை. தேவகோட்டை தொப்பி சார் பதிவர் பயிற்ச்சிப் பட்டறையில் உங்களுக்கு மட்டும் கிட்டதட்ட இரண்டு வாரங்கள் ஒதுக்கி, சிற்ப்பாக அறிமுகம் செய்ததோடு, அவர், தளிர் அண்னா பெரிய எழுத்தாளாராக இருந்தாலும் கூட சிறிய பழகும் நடையில் கவிதை எழுதுபவர்களை திருத்தி நல்ல கவிஞர்களாக மாற்றி வருகிறார் நீயும் அவரிடம் கவிதைகளை கொடுத்து செப்பனிட்டு பின் வெளி உலகத்தில் உலாவர விடு என்று சொன்னதால் தான் உங்கள் பதிலுக்கு காத்து நிற்கிறேன். ஆனால் பதில் இல்லை, மறுபடியும் தொப்பி சாரிடம் சொன்னேன் அண்னா கண்டு கொள்ள மறுக்கிறார் என்று. ஆனால் சார் அவர்களோ, அத்தனை பெரிய எழுத்தாளர்ய்க் பக்கத்தில் போய் அதுவும் அவருடைய கதையை பற்றிக் கருத்து ஏதும் சொல்லாமல் சுயனலமாக உன் கவிதையை கேட்டது தவறு என்றார். கருத்து சொல்லக் கூடாது என்ற ஆணவம் எதுமில்லை அய்யா. இதோ உங்கள் கதை பற்றி என் வியூ. ஆங்கிலேயர்களின் காலத்தை அப்படியே வர்ணனையில் அப்பி வைத்து விட்டீர்கள். பீரியட் கதை எழுத தனி திறமை வேண்டும் உங்களுக்கு அது கொட்டிக் கிடக்கிறது. ஜெயகாந்தனின் தாயுமானவன் கதை போல அச்சுபிசகாமல் எழுதியிருக்கிறீர்கள் அண்னா. நாளை என்னுடைய இன்னும் ஒரு கவிதையை இங்கே பதிவு செய்கிறேன். வணக்கம். பேரன்புசால் சித்திரராமன்

    ReplyDelete
  5. அண்னா, நீங்கள் பெரிய எழுத்தாளார் எனக்கு பதில் தராவிட்டாலும் உங்களிடம் வீம்பு பாராட்டாமல் புதிய கவிதைகளை பதிவிட தொப்பி சார் ஆனையிட்டபடியால் இதோ என்னுடைய கவிதை ( சார் ரொம்ப நல்லா இருக்கிறது என்றார்) தலைப்பு: கோலம். கவிதை:
    பொங்கல் தோறும் எங்கள் வாசல் நிறைப்பது மட்டும் அல்ல தேர்தல் தோறும் எங்கள் ஊரை ஆக்குமே விழாக்....... ( விழாக்கோலம் என்ற பொருளில் எழுதியுள்ளேன் அண்னா.) கவிதைby காட்பாடி சித்திரராமன்

    ReplyDelete
  6. ஏன் அண்னா இப்படி இருக்கிறீர்கள் எளிய சாதாரனமான ஒருவனின் கவிதையை நாம் எதற்கு திருத்த வேண்டும் நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தொப்பி சாரிடம் சொன்னதற்கு ஏன் அந்த சார் இப்படி இருக்கார், சரி நீ பாட்டுக்கு உன் கவிதைச் சிந்தனைகளை பதிந்து கொண்டே இரு, அவர் என்னைக்கு திருத்த நினைக்கிறாரோ அன்று திருத்தட்டும் என்றார் மேலும் அதுவரை தளிருக்கு பின்னூட்டம் இடப் போவதில்லை என்றும் சொன்னார். அவருடைய பேட்டி பதிவிற்கு நீங்கள் ஏன் பின்னூட்டம் இடவில்லை. தேவகோட்டை தொப்பி சார் பாவம் சார். உங்கள் பெயரில் விழா எடுத்து கொண்டாடும் ஒரு நல்ல வாசகரை இழந்துவிடாதீர்கள் அண்னா. உங்கள் ஈமெயில் அய்டி கொடுத்தால் அதற்கு என் கவிதைச் சிந்தனைகளை அனுப்பி வைப்பேன். இப்படி பின்னூட்டத்தில் போட்டுத் தொலைப்பதால் கவிதை செம்மையாவதற்கு முன்னரே வாசகர் கைகளுக்கும் போய்விடுகிறது. இதோ இன்னுமொரு கவிதை, தலைப்பு: திரட்டு மெயின் கவிதை: பல கடைகளில் எடுத்தால் திருட்டு பல நூல்களில் சுட்டால் அது...... ( ஹைக்கூ இலக்கனம் தவறக் கூடாது என்பதால் தலைப்பில் மட்டுமே “திரட்டு” உள்ளதை கவனியுங்கள் அண்னா. அன்புள்ள காட்பாடி.கவிஞர். சித்திரராமன்

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பரே! வணக்கம்! இந்த பதிவை எழுதி போஸ்ட் செய்தபின் என்னுடைய கணிணியின் ஹார்ட் டிஸ்க் பழுதாகிவிட்டது. அதனால் இரண்டு மாதங்களாக புதிய பதிவுகள் எதுவும் இடவில்லை. அறிந்திருப்பீர்கள். கில்லர்ஜி சார் என் சிறந்த நண்பர். அவர் பயிற்சி பட்டறை நடத்திய விஷயங்கள் ஏதும் நான் அறியேன். அவர் என்னை புகழ்ந்து சொல்லியிருந்தாலும் அந்த புகழ்ச்சிக்கெல்லாம் நான் உரியவன் அல்ல. நானும் ஓர் வளர்ந்துவரும் எழுத்தாளனே அன்று பிரபல எழுத்தாளன் இல்லை. என்னுடைய இடைவிடாத முயற்சியால் பத்திரிகைகளில் சில படைப்புகள் பிரசுரமாகி பெயர் பெற்றுத் தந்தன. நீங்களும் முயற்சியுங்கள். ஆனால் நீங்கள் ஏதோ என்னுடன் விளையாடுவது போன்றுதான் எனக்குத் தோன்றுகிறது. சித்திர ராமன் என்ற புனைப்பெயரில் விளையாடி பார்க்கிறீர்கள். முன்பும் இப்படி ஒரு நண்பர் கொன்றைவனத் தம்பிரான் என்ற பெயரில் என்னோடு விளையாடினார். அவருடன் விளையாடியதில் நல்ல அனுபவம் கிடைத்தது. நீங்கள் ஹைக்கூவில் திருத்தங்கள் கேட்டிருக்கிறீர்கள். முதலில் பிழையின்றி எழுதப்பழகுங்கள். அப்புறம் நிறைய வாசியுங்கள். ஹைக்கூ என்றால் என்னவென்று பிரபல ஹைக்கூ கவிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதையெல்லாம் வாசித்து நிறைய எழுதிப் பழகுங்கள். ஹைக்கூ வசப்படும். நானும் பிறவியிலேயே எழுத்தாளனாகவில்லை. எழுதிப் பழகி பிழைதிருத்தி கற்றுக்கொண்டுதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஆகவே இடைவிடாத முயற்சியும் பயிற்சியும் உங்களை உயர்த்தும். வாழ்த்துகள். கணிணி பழுதானதால் உங்களுக்கு உடனே பதில் அளிக்க முடியாமல் போனது. அத்துடன் இப்போது குடும்ப சூழல் வலைப்பூ பக்கம் அதிகம் வர முடிவதில்லை. அதனால் பதிவுகள் இடுவதும் எழுதுவதும் குறைந்து விட்டது. அதனால் தாமதம் ஏற்பட்டுவிட்டது. வருந்துகிறேன். நன்றி.

      Delete
    2. ஹைக்கூவிற்கு தலைப்பு கூடாது. உங்கள் கவிதை சென்ரியு வகையில் வரும். அதற்கும் தலைப்பு இடக்கூடாது. பல கடைகளில் எடுத்தால் திருட்டு/ பல நூல்களில் எடுத்தால்/ திரட்டு. இப்படி முடித்திருக்க வேண்டும். ஏதோ என்னால் முயன்ற திருத்தம்.

      Delete
  7. அண்னா தங்கள் பதிலுக்கும் திருத்ததிற்கும் நன்றி! எங்கள் தேவகோட்டைப் பதிவர் பெயர் நீங்கள் சொல்வது போல் அல்ல தேவகோட்டை ஆல்பர்ட் ஞானமணி என்று தான் எங்களுக்கு அறிமுகம். மேலும் அவர் நண்பர்கள், இந்த ஆலு தினம் ஒரு பேர் சொல்லுவான் உனக்கு என்ன பேர் சொன்னான் என்று சொல்லிவிட்டு, நாங்கள் அவனை தொப்பி சார் என்று அழைப்போம் என்றார்கள் அண்னா எங்களப் பார்த்து ,ஏன் பதிவர் பட்டறை பற்றி இப்படி விளம்பரம் செய்கிறீர்கள் என்று கோபித்துக் கொண்டார் அதனால் தான் அவர் வலைப்பக்கத்தையே எங்களுக்கு அறிமுகம் செய்யவில்லை என்றும் சொன்னார். தொழிலாளர்கள் வேலை மட்டும் செய்து கொண்டே போகமால் இலக்கியமும் படிக்க வேண்டும் என்று தான் தளிர் போன்ற தரமான எழுத்துக்களை அறிமுகம் செய்வதே அவர் வேலை என்றார். அந்த நல்ல உள்ளத்தை வாழ்த்துவது நமது கடமை அல்லவா சார்.
    கவிஞர்.சித்திரராமன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2